இந்தியாவின் உள்பகுதிகளின் இதயத்தில் ஒரு அமைதியான நெருக்கடி உருவாகி வருகிறது. நாடு முழுவதும் உள்ள கிராமப்புற சமூகங்கள் சந்திக்கும் பொருளாதார சவால்கள் பற்றி பேசு கிறது.இந்திய பொருளாதாரத்தை கண்காணிக் கும் மையத்தின்( CMIE) சமீபத்திய தரவுகள் ஒரு அப்பட்டமான எதார்த்தத்தை வெளிப் படுத்தின. ஊதியங்கள் சுருங்கி வருவதும் பண வீக்கம் உயர்ந்து வருவதும் இந்திய கிராமங்களை நெருக்கடிகளின் படுகுழியில் தள்ளுபவை. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரவுகளை சந்திக்க முடியாமல் திணறுவது ஒரு உறுதியான துயரத்தின் கதை ஆகும்.
துவரம் பருப்பு முதல் வெங்காயம் வரை விலை உயர்வு
கடந்த 27 மாதங்களில் 25 மாதங்களாக கிராமப் புறங்களில் ஊதியம் சுருங்கி வருகிறது. பிப்ரவரி 2024 -இல் அது 3.1 சதவீதம் அளவிற்கு சரிந்தது. வாங்கும் சக்தியில் ஏற்படும் இந்த அரிப்பு பணவீக்கச் சூழலால் மேலும் அதிக ரித்தது.துவரம் பருப்பு முதல் வெங்காயம் வரை யிலான அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு ஏற்கனவே இறுகிப் போய் உள்ள பட்ஜெட்டை மேலும் அழுத்துகிறது. சாத்திய மற்ற தேர்வுகளுடன் குடும்பங்கள் போராடு கின்றன. ஆனால் அதன் விளைவுகள் வீட்டு பொரு ளாதாரத்தின் எல்லைக்கு வெளியேயும் பாதிப்பை ஏற்படுத்தின.
டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள் விற்பனை சரிவு
தேங்கி நிற்கும் டிராக்டர் விற்பனையும் இருசக்கர வாகனங்களின் விற்பனை வீழ்ச்சி யும் மந்தமான நுகர்வுப் போக்கை உறுதிப்படுத்து பவை. இது ஆழமான அமைப்பு ரீதியான சிக்கல்க ளின் முன்னோடி நிகழ்வுகள். கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரத் துயரங்களை மட்டும் இது பிரதிபலிக்கவில்லை. இந்தியா முழுவதும் ஒரு பரந்து விரியும் சோகத்தையும் எடுத்துக்காட்டுபவை. டிராக்டர்கள் விற்பனை இல்லாமல் தூசி படிந்து காணப்படுகிறது. மோட்டார் சைக்கிள் விற்பனை குறைவானதால் கிராமப்புற சமூகங்களின் முன்னேற்றச் சக்கரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. முன்னேற வேண்டும் என்ற விருப்பத்தை மட்டுமல்ல, வளர்ச்சிக்கும் இவை முட்டுக்கட்டை போடுகின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பண வீக்க விகிதங்களுக்கி டையே உருவான வேறுபாடு கிராமப்புற மக்க ளின் தோள்களின் மீது இறக்கி வைக்கப்படு கிறது.இதனால் அவர்கள் சுமையும் கூடுகிறது. நகர்புறப் மக்கள் இந்தச் சுமையை ஓரளவுக்கு எளிதாக எதிர்கொண்டாலும் கிராமப்புறங்களில் இது மேலும் கூர்மையானது. இந்த ஏற்றத் தாழ்வு வெறும் பொருளாதாரப் புள்ளி விவரங்கள் மட்டுமல்ல,கிராமப்புற வறுமையை நிரந்தரமாக்கும் ஏற்றத்தாழ்வுகளின் பிரதிப லிப்புகள்.இந்த சூழலில் வளர்ச்சிப் பொருளா தார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயாவின் கருத்துக்கள் மிகவும் அழுத்தமானவை.
பணவீக்கத்தை தூண்டும் மறைமுக வரிகள்
மறைமுக வரிகள் பணவீக்கத்தை தூண்டுவ தில் கணிசமான பங்கு வகிக்கின்றது.அதோடு கிராமப்புற மக்களின் அவல நிலையை மேலும் மோசமாக்கின. பொருளாதாரக் கொள்கைகளின் நோக்கம் சரியாக இருந்தாலும் முறையான அமலாக்கம் இல்லாததால் கிராமப்புறத் துயரங்களை தணிப்பதற்கு பதிலாக ஆழமான திட்டமிடாத பக்க விளைவுகளை அவை ஏற்படுத்துகின்றன. தரவுகள் புள்ளிவிவரங்க ளுக்கு பின்னால் நெருக்கடியில் சிக்கி உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கை உள்ளது.
விலைவாசி தான் முக்கியப் பிரச்சனை
கிராமப்புற சமூகங்களில் பரவியுள்ள வெளிப்படையான கவலையை சமீபத்திய கணக்கெடுப்புகள் வெளிப்படுத்துகின்றன. பதில் அளித்தவர்களில் 71சதவீதம் பேர் விலைவாசி உயர்வையே முக்கிய கவலையாக குறிப்பிட்டனர். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார வசதி இல்லாததால் அல்லல்படும் விளிம்புநிலை மக்களுக்கு பணவீக்கம் அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக நின்றது. கிராமப்புற இந்தியா எதிர்கொள்ளும் பன்முகச் சவால்களை எதிர்கொள்ள அர்த்தமுள்ள முழுமையான அணுகுமுறை கடைப்பிடிக்க வேண்டும்.பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்ப தற்கான நீண்டகால உத்திகளையும் மேற்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்க டியின் கருநிழலில் இருந்து இந்தியாவின் கிராமங்களை அப்பொழுதுதான் விடுவிக்க முடியும். தேசத்தின் செழுமையின் முது கெலும்பு கிராமப்புறங்கள் தான் என்ற வகையில் அவற்றின் முழுத் திறனையும் நாடு உணர முடியும்.
தி ஸ்டேட்ஸ்மேன் தலையங்கம்.8/5/24.
தமிழில் : கடலூர் சுகுமாரன்