அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது மாநாடு டிசம்பர் 13 முதல் 16 வரை கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறுவதையொட்டி தியாக பூமியான வெண்மணியிலிருந்து வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. உளுந்தூர்பேட்டை நகரை வந்தடைந்த ஜோதி பயணக்குழுவினருக்கு நகர எல்லையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. அகில இந்திய துணை செயலாளர் விஜூ.கிருஷ்ணன், துணைத் தலைவர் எஸ்.கே.பிரிஜா, மாநில பொதுச் செயலாளர் சாமி, நடராஜன், துணைச் செயலாளர் எஸ்.துரைராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை, செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்ட பொருளாளர் எம்.சி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.