இந்தியா என்னும் உருவகம், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு மற்றும் அரசிய லமைப்பு விழுமியங்கள் கடுமை யான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி யுள்ளன. சங்பரிவார் எழுப்பியுள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கம் அந்த அச்சுறுத்தலை மேலும் தீவிரப்படுத்துகிறது. கூட்டாட்சி முறையைக் குழிதோண்டிப் புதைத்து, ஒன்றிய அரசுக்கு சர்வாதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற மறைமுக செயல்திட்டத்தை சங் பரிவாரம் கொண்டுள்ளது.
தங்களுக்கு சாதகமாக இல்லாத மாநில அரசுகளை சீர்குலைத்து குறுக்குவழி மூலம் அரசு நிர்வாகத்தை கைப்பற்றும் நடவடிக்கை இது. இதன் மூலம், இந்திய நாடாளுமன்ற அமைப்பின் தூண்களில் ஒன்றான மாநிலங்களவை இருப்பதையே சங்பரிவார் கேள்வி எழுப்புகிறது. மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம் பல்வேறு கட்டங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களின் முடிவுகளைக் கொண்டு கட்சிகளின் நிலை தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், மாநிலங்களவையின் அரசியல் பன்முகத்தன்மை தொலைந்து விடும்.
- பினராயி விஜயன், கேரள முதல்வர்