tamilnadu

img

மாற்று அரசியலுக்கான மார்க்சிய உரையாடல் - என். குணசேகரன்

மறைந்த அய்ஜாஸ் அகமது அவர்கள் ஒரு தலைசிறந்த மார்க்சிய அறிஞர். இன்றைய காலச் சூழலின் சவால்களை மார்க்சிய நோக்கில் புரிந்து கொள்ளவும், போராட்ட நடைமுறைகளை அமைத்திடவும், தொடர்ந்து வழிகாட்டி வந்த மார்க்சிய ஆசிரியர். 1990ஆம் ஆண்டுகளில் மார்க்சிய ஆய்வா ளர்கள் பலர் தடம் மாறி, மார்க்சியத்தின் ஜீவ நாடியான பாட்டாளி வர்க்கப் புரட்சி, சோசலிச இலக்குகளைக்  கைவிட்டு மார்க்சியத்தை திரித்து வந்த நிலையில், அய்ஜாஸ் அகமது மகத்தான மார்க்சிய ஆசானாகத் திகழ்ந்தார். புரட்சிகரமான மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, கருத்துப் போராட்டத்தை அவர் நடத்தி வந்தார். 2022ஆம் ஆண்டு மறைந்த அய்ஜாஸ் அகமது ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். நவீன தாராள மயம் என்ற திருப்பத்தை அடைந்த இன்றைய முதலாளித்துவ இயக்கத்தினை மார்க்சிய வழி நின்று ஆய்வு செய்திடும் எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. அத்துட ன் இன்றைய முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் வளர்ச்சி, புரட்சிகர மாற்றத்தின் திசைவழி குறித்தெல்லாம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆய்வு நெறியில் நின்று படைப்புக்களை அளித்துள்ளார். பேராசிரியர் அய்ஜாஸ் அகமது அவர்களு டன் தோழர் விஜய் பிரசாத் நடத்திய உரை யாடல் “மார்க்ஸ் - புரட்சியின் அரசியல்” என்ற தலைப்பில் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.

மார்க்சியம் முன்னெடுக்கும் புரட்சிகர அரசியலை ஆழமாக புரிந்து கொள்ள உத விடும் நூலாக இந்த நூல் அமைந்துள்ளது. இந்த உரையாடலில் இருவரும் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், மார்க்சின் பங்களிப்பு பற்றிய பல பரிமாணங்களை வெளிக் கொணர்கிறது. மார்க்சின் எழுத்துக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது மட்டுமல்ல; மார்க்சின் எழுத்துக்களுக்கு அடிப்படையாக இருந்த மார்க்சின் எண்ணவோட்டத்தை ஆழமாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த உரையாடல்கள் அமைந்துள்ளன. தோழர் விஜய் பிரசாத் உலக அள வில் செயல்பட்டு வரும் மார்க்சிய செயல்பாட்டா ளர். மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, போரா டும் உழைக்கும் வர்க்க இயக்கங்களின் தத்து வார்த்த புரிதலை மேம்படுத்தும் படைப்புக் களை விஜய் பிரசாத் அளித்து வருகிறார். அய்ஜாஸ் அவர்களின் உயரிய மார்க்சிய சிந்தனைகள் தெளிந்த நீரோட்டமாக வெளி வரும் வகையில் விஜய் பிரசாத் உரையாடலை ஒருங்கிணைக்கிறார். கனமான, தத்துவக் கட்டு ரைகளை, கட்டுரை வடிவத்தில் படிக்கும் போது சிலருக்கு ஏற்படும் சோர்வு, இந்த உரையாடல் வடிவ படைப்பில், உரையாட லோடு ஒன்றிப்போகும்போது ஏற்படுவதில்லை. நூலின் முன்னுரையில் விஜய்பிரசாத் குறிப்பிடுவது போன்று, மார்க்ஸ் பொது தளத்தில் பொருளாதார அறிஞராகவே முன்னிறுத்தப்படுகிறார். மார்க்சின் பொரு ளாதாரம் பற்றிய பங்களிப்பு மகத்தானதுதான் என்பதில் ஐயமில்லை. 

அதிலும் இன்று முதலாளித்துவத்தின் நேரடித் தாக்குதல் உழைக்கும் மக்கள் மீது அதிகரித்துள்ள நிலையில், வலதுசாரி அரசி யலை பக்கபலமாக வைத்துக் கொண்டு, முத லாளித்துவ கருத்தியல் ஆயுதபாணியாக மாறி யுள்ள நிலையில், புரட்சிகர அரசியல் இன்று அவசரத் தேவையாக உள்ளது. அதற்கு மார்க்சின் புரட்சிகர அரசியல் பார்வை குறித்த ஆழமான புரிதல் தேவை. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் சிறந்த கையேடாக இந்த உரையாடல் நூல்  திகழ்கிறது. பேரா. அய்ஜாஸ் அகமது, பேரா.விஜய்  பிரசாத் ஆகியோர் இடையிலான உரையாட லில் இடம்பெற்றுள்ள  ஜெர்மன் சித்தாந்தம், கம்யூனிஸ்ட் அறிக்கை, லூயி போனபர்ட்டின் பதினெட்டாம் புரூமர், பிரான்சில் உள்நாட்டுப் போர் ஆகிய நான்கு நூல்களும் மார்க்சின் புரட்சிகர அரசியலையும், தத்துவ கருத்தாக்கங்களையும்  உள்வாங்கிக் கொள்ள  தேவையான அடிப்படை நூல்கள். ஏற்கனவே மார்க்சியம் அறிந்தவர்கள் மார்க்சிய வாசிப்பை மேற்கொண்டவர்கள், மாற்றத்திற்கான அரசியல் நாட்டம் கொண்டவர்கள் அனை வரும் மேற்கண்ட நூல்களை ஆழமாக வாசிக்க  இந்த உரையாடல் நூல் மிகச் சிறந்த வழி காட்டியாக உள்ளது. இதனைச் சிறப்பாக தோழர் ச.லெனின் மொழியாக்கம் செய்துள்ளார். பாரதி புத்தகால யம் மிக நேர்த்தியாக இந்த நூலை வெளி யிட்டுள்ளது. மார்க்சியர்கள், முற்போக்கா ளர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள், பொது மக்களிடம் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தும் மகத்தான பணி இது. நூல் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!

“மார்க்ஸ் - புரட்சியின் அரசியல்”
- அய்ஜாஸ் அகமதுடன் ஓர் உரையாடல் விஜய் பிரசாத் -
விலை : ரூபாய் 80/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்