tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘கூட்டணி ஆட்சிதான் அமையும்’

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பாலையில் நடந்த தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் அக்கட்சியின் இளை ஞரணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ கத்தில் 2026 நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனவரி 9-இல் தேமுதிக நிலைப்பாட்டை தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெளிவாகப் பேசியுள்ளார். அப்போது கூட்டணி குறித்து அவர்  தெரிவிப்பார். தமிழகத்தில் 2026 இல் கண்டிப்பாக கூட்டணி  ஆட்சிதான் அமையும்” என்றார்.  தியாகிகள், தலைவர்கள் அதிகம் கவுரவிப்பு சென்னை: முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில்  25 தியாகிகளுக்கு மட்டுமே சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது  என்றும், திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் தியாகிகள்,  தலைவர்களுக்கு 63 சிலைகள், 11 மணி மண்டபங்கள், அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 28 சிலை களும் 12 அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலக்கத்தில் தொகுதி சென்னை: சென்னை எழும்பூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில், வருகிற சட்டமன்ற பொதுத் தேர்த லில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை  பெறுவதில் உறுதியாக இருப்பதாக வைகோ தெரிவித்திருக் கிறார். ‘எதிர்விணை வேண்டாம்’ திண்டிவனம்: சமூக வலைதளங்களில் நம்மை யார் தவறாக விமர்சித்தாலும் எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று  தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சமூக ஊடகப் பேரவை கலந்தாய்வுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராம தாஸ் அறிவுரை வழங்கினார். சிறைபிடிக்கும் உத்தரவு ரத்து சென்னை: அனைத்து ஆம்னி பேருந்து உரிமை யாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விபத்து ஏற்படுத்திய கனரக வாகனங்களை 100 நாட்கள் வரை சிறை பிடிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் வெளி யிட்ட உத்தரவை தொடர்ந்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கடந்த ஜூன் 26 அன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை முன்வைத்திருந் தோம். கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் பயணிகள்  எதிர்கொள்ளும் பொருளாதார, சேவை பாதிப்புகளை மதித்து  தமிழக முதலமைச்சர் சென்னை காவல் ஆணையரகம் மூல மாக வெளியிட்ட உத்தரவை ரத்து செய்ததற்கு அனைத்து  ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டிருந்தது.

மான்கள் சரணாலயம் அமைத்திடுக!

திருவாடானை: இராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை கண்மாய்  மற்றும் காட்டுப்பகுதி களில் அதிகளவில் புள்ளி மான்கள் கடந்த 10  ஆண்டுகளாக பல்கிப் பெருகி வருகிறது. குறிப் பாக திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்கல குடி, எஸ்.பி.பட்டினம் உட்பட ஏராளமான கிரா மப் பகுதிகளின் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், கண்மாய் பகுதிகளிலும் அதிகளவில் மான்கள் நடமாட்டம் உள்ளது. எனவே, இப்பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். 12 தமிழர்கள் மீட்பு சென்னை: சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்  தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் காரண மாக, அந்நாடுகளுக்கு வேலை மற்றும் உயர் கல்வி நிமித்தமாகச் சென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 12 தமிழர்கள் போர்க்கால அடிப்ப டையில் தமிழகம் திரும்பு வதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டார். அதன்படி சனிக்கிழமை காலை 6.30 மணியள வில் தமிழர்கள் சென்னை  சென்ட்ரல் ரயில் நிலை யத்திற்கு வரவழைக்கப் பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு ரயில்கள் மூலம் அமைச் சர் ஆவடி சாமு நாசர் அனுப்பி வைத்தார்.  விழிப்புணர்வு கார் பேரணி சென்னை:  பெண்  பாதுகாப்பு, சாலை பாது காப்பை வலியுறுத்தி பெண்கள் குடும்பத்துடன் காரில் உலா வரும் விழிப்புணர்வு நிகழ்ச் சியை திரைக் கலைஞர்  சுஹாசினி மணிரத்னம் தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான பெண் கள், தன்னார்வலர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற னர்.