அவிநாசி, ஜன.6- அவிநாசி அருகே பட்டியலின பெண் சமைத்த உணவை பரிமாறா மல், வேறு ஆட்கள் மூலம் சமைக் கப்பட்ட உணவு பரிமாறப்பட்டதன் மூலம் நீதிமன்ற அறிவுறுத்தல் வெறும் கண்துடைப்பாக மாறியுள்ள தென முற்போக்கு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், திருமலைக்கவுண்டம்பா ளையம் அரசு உயர்நிலைப்பள்ளி யில் அருந்ததிய பெண் பாப்பாள் என்பவர், 2018 ஆம் ஆண்டு சமை யலாளராக நியமிக்கப்பட்டார். அப் போது அவர் சமைக்கக்கூடாது என சாதி ஆதிக்கவாதிகள் சிலர், அவ ரைத் தாக்கி வன்கொடுமையில் ஈடு பட்டனர். இதுதொடர்பான வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தற்போது நிலுவை யில் உள்ளது. இதனிடையே கடந்த ஜன.3 ஆம் தேதியன்று வழக்கு விசா ரணைக்கு வந்தபோது, நீதிபதி சொர் ணம் நடராஜன், சமையலர் பாப்பாள் சமைத்து குழந்தைகளின் பெற்றோர் கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண வருந்தச் செய்யுமாறு அறிவுறுத்தி யுள்ளார். இதையடுத்து சனியன்று, இதற்கான திடீர் ஏற்பாட்டை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூண்டுதலின் பேரில், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முன்னின்று செய்துள்ளார். இதற்குப் பொறுப்பான வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (BDO) அர சுத் தரப்பில் இருந்து எந்தவிதமான முறைப்படியான தகவலும் அளிக்கப் படவில்லை. இந்நிலையில், சமையலர் பாப் பாள், எப்போதும் போல குழந்தை களுக்கான உணவை, அமைப்பாள ரின் அறிவுறுத்தலின்படி சமைத்துள் ளார். சமபந்தி விருந்துக்கென அதே பள்ளியில், வேறு சமூக ஆட்களைக் கொண்டு, உணவு தயாரிக்கப்பட் டது. இந்நிகழ்வில், இவ்வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி வரும் வழக் கறிஞர் ப.பா.மோகன், அரசு சிறப்பு வழக்கறிஞர் பாண்டியன், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ், சண். முத்துக்குமார் (தபெதிக), முகில் ராசு (திவிக), ஆறுமுகம் (தவிக), வி.பி.முருகேசன் (ததீஒமு) மார்க் சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பினர் கலந்து கொண்டனர். எதிர்தரப்பு வழக்கறிஞர் அருணாச்ச லம் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் உட்பட சிலரும் அங்கிருந்த னர். அப்போது, அங்கு அவிநாசி வட் டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவ லர், காவல்துறை அதிகாரிகளும் வந்தனர்.
இதையடுத்து வழக்கறிஞர் மோகன், அங்கு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களிடம் கேட்ட போது, “வேறு ஆட்கள் வந்து, பாப் பாள் அழைத்து வந்துதான் செய்கி றார்கள்” என்றனர். ஆனால், அது பொய் எனத்தெரியத் தொடங்கும் போதே, மதியம் குழந்தைகளுக்குக் கொடுக்க பாப்பாள் சமைத்த உணவு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. குழந்தைகள் உணவருந்தும் இடத் திற்கு அனைவரும் சென்று பார்த்த போது, பாப்பாள் சமைத்த உணவு சிறிதளவும், வெளி நபர்கள், சமைத்த உணவு நிறையவும் பரிமாறப்பட்டது. இதில், பாப்பாள் சமைத்த உணவை ஒதுக்கி வைத்துவிட்டு வெளி ஆட்கள் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட் டுக் கொண்டிருந்தனர். சமையலர் பாப்பாள் கைப்பட சமைத்து, அதனை அனைத்துத் தரப்பினரும் உண்ண வேண்டும் என்று நீதிமன்ற அறிவு றுத்தல் அங்கு அப்பட்டமாக மீறப்பட் டது தெரிய வந்தது. இதன் காரண மாக வழக்கறிஞர் ப.பா.மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வா கிகள், பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பு நிர்வாகிகள் இதனை ஏற்க முடியாது என மறுத்துவிட்டனர். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் கள் தரப்பு வழக்கறிஞர் அருணாச் சலம் கேட்டுக் கொணடதன் பேரில், மீண்டும் வேறொரு நாளில் பாப்பாள் கைப்பட சமைத்து அனைத்துத் தரப் பினரும் சாப்பிடலாம் எனத் தெரி விக்கப்பட்டது.