சென்னை, ஆக.21- சென்னை அருகே கோவிலாம்பாக்கத் தில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி தாய் கண்முன்னே உயிரிழந்தார். சென்னை அருகே கோவிலம்பாக்கத் தைச் சேர்ந்த கீர்த்தி, தனது பத்து வயதான மகளை இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமி நிலைத்தடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி சிறுமி மீது ஏறி இறங்கியது. இதில் சிறுமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு சிறுமியின் தாய் கீர்த்தி கதறி அழுதார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள், போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் அதிவேகத்தில் செல்வது பற்றி பல செய்தி கள், புகார்கள் வெளியான நிலையிலும் அதிகாரிகள் நட வடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.