சென்னை, ஆக.24- பிரதமரின் விவசாயி களுக்கான எரிசக்தி பாது காப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் வகையில் 5,000 விவசாய மின் இணைப்புகளை மாற்றி அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட் டுள்ளது. அதாவது, சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5,000 விவசாய மின் இணைப்புகளை, சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்தை விவசாயிகள் அரசுக்கு விற்கும் வழிவகை செய்யப் பட்டுள்ளது. பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாற்றி அமைக்கப்படுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தலா 30 விழுக்காடு நிதியும், எஞ்சிய 40 விழுக் காடு நிதி மின்வாரியம் உதவியுடன் வங்கி கடன் பெற்று விவசாயிக்கு தரப்படும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. சிறி யளவில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி நிலையத் தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் பாசன பணிக்கு பயன்படுத்தப்படும். மீத முள்ள மின்சாரத்தை மின்வாரியம் விலைக்கு பெற்று கொள்ளும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது.