வீரம் விளைந்த வெண்மணி பூமியில் தியாகிகள் நினைவு தினமான டிசம்பர் 25 அன்று சிஐடியு சார்பில் 44 தியாகிகளின் நினைவாக, 44 நெல் மூட்டைகளை சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் வழங்கினார். சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.