tamilnadu

img

நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,அக்.25- தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவ லாக மழையும் என்றும் அக்டோபர் 29 அன்று கனமழை வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் அக்.26 அன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னி யாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 27 ஆம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர்,  தென்காசி, விருதுநகர், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 28 அன்று தேதி, தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 29 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.