tamilnadu

img

திருச்சியில் 20 லட்சம் விதைப் பந்துகள் தூவும் நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி, டிச.6 - திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் காப்புக்  காட்டில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்  குமார் தலைமையில், பள்ளி மாணவ, மாணவியர்கள் உதவியுடன் வனப்பகுதியில் நீர்நிலைகளின் அரு கே விதைப் பந்துகள் தூவப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் தற்போது 10 சதவீத வனப்பரப்பு உள்ளது. இதனை 33 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு பசுமை இயக்கம் சார்பாக தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடுதல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதனொரு பகுதியாக விதைப்  பந்துகள் தூவும் திட்டம் தொடங்கப் பட்டது. இதற்காக தருமபுரி மாவட்டம் பச்சைமுத்து கல்வி நிறுவனத்தில் 20 லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கப் பட்டன. இந்த விதைப் பந்துகளில் செம்மண், மாட்டுச் சாணம், தேங்காய் நார் முதலியவை கலந்து தரமான செம்மரம், தான்றி, கடுக்காய், மூங்கில், தேக்கு, மலைவேம்பு, கருமருது, குதிரைக்குழம்பு, பூவரசு, ஆல், அரசு, அத்தி, நீர்மருது, வேங்கை, தூங்கு  வாகை, சொர்க்கம், பூச்சை, சரக்கொன்றை, நெல்லி, சந்தனம், வில்வம், பிலிவாகை போன்ற விதை களைக் கொண்டு விதைப் பந்துகள் உருவாக்கப்பட்டன.  தற்போது பருவமழை காலம் என்ப தால், முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தின் எம்.ஆர்.பாளையம்,  தச்சமலை, துறையூர், பெரிய மலை, புத்தாநத்தம் போன்ற வனப்பகுதிகளில் பள்ளி மாணவர்கள் உதவியுடன் 50,000 விதைப் பந்து கள் புதனன்று தூவப்பட்டன. இதனை  தொடர்ந்து தரம் குன்றிய வனப்பகுதி களை கண்டறிந்து, 20 லட்சம் விதைப் பந்துகள் தூவும் பணி இந்த பருவ மழை காலத்திற்குள் நிறைவடையஉள்ளது.  இந்த விழாவில் உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, வனச்சரக அலு வலர்கள், பசுமை தோழர் காட்வின் கநிஜில் வாய்ஸ் டிரஸ்ட் ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.