தஞ்சாவூர், பிப்.5- டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழையால் 2.15 லட்சம் ஏக்கரில் பாதிக்கப் பட்டுள்ள பயிர்களை அமைச்சர் கள் குழு ஆய்வு செய்தது. காவிரி டெல்டா மாவட்டங் களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை யில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை, பருவம் தவறி பெய்த திடீர் மழையால், அறு வடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தது. மேலும், அறுவடை செய்யப் பட்ட நெல் நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் கொட்டி வைத்திருந்த நெல்களும், சாகு படி செய்யப்பட்ட உளுந்து, நிலக் கடலை ஆகிய பயிர்களும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதையடுத்து, பாதிக்கப் பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், கொள்முத லில் நெல் ஈரப்பதத்தினை 22 சத வீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்த னர். இந்நிலையில், வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப் பட்ட பகுதிகளில் ஆய்வுசெய்த னர். இதனை நேரடியாக ஆய்வு செய்ய, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு, வழங்கல் துறை அமைச் சர் அர.சக்கரபாணி ஆகியோர் அடங்கிய குழுவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் கிராமத்தில், அறுவடைக்கு தயாரான நிலையில், மழைநீரில் சாய்ந்த நெற்பயிர்களை பார்வையிட்டார். அவரிடம் விவ சாயிகள் அழுகிய நெற்பயிர் களை காண்பித்தனர். இதையடுத்து, உக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளிடம் ஈரப்பதம் குறித்து கேட்டறிந்தார். தொட ர்ந்து ஒரத்தநாடு அருகே ஆம்ப லாப்பட்டு, பட்டுக்கோட்டை அருகே புதுக்கோட்டை உள்ளூர் ஆகிய இடங்களில் ஆய்வுசெய்தார். அப்போது செய்தியாளர்களி டம் அமைச்சர் அர.சக்கரபாணி கூறுகையில், ‘‘மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உடனடியாக அறிக் கையை தயாரித்து வழங்குமாறு முதல்வர் எங்களுக்கு உத்தர விட்டுள்ளார். அதன்படி நான் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களி லும் ஆய்வு செய்துள்ளார்.
கொள்முதல் நிலையங் களில் தற்போது 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கப் படுகிறது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் 22 சதவீதம் வரை தளர்வு வேண்டும் என விவசாயி கள் கேட்டுள்ளனர். இதை முதல் வரிடம் எடுத்துக் கூறப்படும். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயி களுக்கு தற்போது பாதிப்பு ஏற் பட்டுள்ளதை எடுத்துக்கூறி காப்பீடுக்கான இழப்பீடும் பெற உரிய ஆலோசனையை முதல் வரிடம் எடுத்துரைக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அந்தந்த மாவட்ட அதிகாரிகள் எடுத்த கணக்கின் படி, 2.15 லட்சம் ஏக்கரில் நெல், உளுந்து, நிலக்கடலை பாதிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள் ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளு டன் கலந்து பேசி அறிக்கையை தயாரித்து முதல்வரிடம் வழங்கப்படும்’’ என்றார். ஆய்வின் போது, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் கா.அண்ணாதுரை (பட்டுக்கோட் டை), என்.அசோக்குமார் (பேரா வூரணி), கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.