tamilnadu

img

எல்ஐசி பங்கு விற்பனையை எதிர்த்து 2 மணி நேர வெளிநடப்பு வேலைநிறுத்தம்

நாடு முழுவதிலும்  கோபாவேசத்துடன்  ஊழியர்கள்  பங்கேற்பு  வெறிச்சோடிய  அலுவலகங்கள்

சென்னை,மே 4- எல்ஐசியின் பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக் கான எல்ஐசி ஊழியர்களின் மதிய உணவு இடை வேளைக்கு முன்பாக இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது.   அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அறைகூவலின்படி நடைபெற்ற இந்த வெளிநடப்பு வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்கள், நாடு முழுவதிலும் எல்ஐசி அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஹைதராபாத்தில் எல்ஐசி தென்மத்திய மண்டல அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் வி ரமேஷ், பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா, துணைத் தலைவர் கே.வேணு கோபால் மற்றும் மண்டல பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். தமிழகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டங்களில் ரமேஷ்குமார், சிவசுப்ரமணியம் (சென்னை கோட்டம்-1), செந்தில் குமார், க.சுவாமி நாதன் (சென்னை கோட்டம்-2), சுரேஷ் (கோவை), ராமன் (வேலூர்), தர்மலிங்கம் (சேலம்), சேதுராமன் (தஞ்சை), ரமேஷ் கண்ணன் (மதுரை), பொன்னையா (திருநெல்வேலி) ஆகியோர் உரையாற்றினர். சிஐடியுவின் மாநிலக் குழு கூட்டம் விருதுநகரில் நடைபெறுவதையொட்டி அங்கு வந்திருந்த சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர்கள் விருதுநகர் எல்ஐசி அலு வலகம் முன்பு ஆதரவு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.  சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் கண்டன உரை யாற்றினார்.

எல்ஐசி ஊழியர்களின் வெளிநடப்பு வேலைநிறுத்தத் திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதி களில் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். எல்ஐசி நிறுவனத்தை பொதுத்துறையில் பாதுகாத்திட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைமையில் எல்ஐசி ஊழியர்கள் கடந்த  28 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.  இன்றைக்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது 3.5 சதவீதம் மட்டுமே என்றாலும் இது இந்நிறுவனத்தை தனியார்மயமாக்கு வதற்கான முதல்கட்ட நடவடிக்கையே ஆகும்.  28 ஆண்டு காலம் நடத்திய போராட்டம் காரணமாக, எந்த ஒரு கட்டத்திலும் எல்ஐசியில் அரசின் பங்குகள் 51 சதவீதத்திற்குக் குறையாது என மக்களவையில் ஒன்றிய அரசு வாக்களித்துள்ளது.  இந்த வாக்குறுதி மீறப்படாமல் காப்பாற்றப்பட வேண்டுமானால் இதர பகுதி தொழிலாளர்களையும், மக்களையும் ஒன்றிணைத்த போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.  அத்தகைய அடுத்த கட்டம் நோக்கி நகரும் போராட்டத்திற்கு புதனன்று வெற்றிகர மாக நடைபெற்றுள்ள வெளிநடப்பு வேலைநிறுத்தம் கட்டியம் கூறியுள்ளது.