சென்னை மாநகராட்சி மேயர் சிவராஜின் 131ஆவது பிறந்தநாளையொட்டி தங்கசாலை சந்திப்பிலுள்ள அவரது சிலைக்கும், அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அரசு செயலாளர் மகேஷ் காசிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.