tamilnadu

img

தமிழக முதல்வர் நேரில் நிவாரணம் வழங்கினார்

தேர்த் திருவிழா விபத்தில் 11 பேர் பலி;  சட்டப் பேரவையில் இரங்கல்

சென்னை,ஏப்.27- தஞ்சை கோவில் திருவிழாவில் மின்கம்பி உரசியதில் 11 பேர் பலியான  பெரும் துயரத்தை ஏற்ப டுத்தியிருக்கும்  சம்பவத்துக்கு சட்டப் பேரவையில் புதனன்று(ஏப்.27) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தேர் விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறி, நிதியுதவியை வழங்கினார். விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  தமிழ்நாடு சட்டப்பேரவை புத னன்று(ஏப்.27) காலை 10 மணிக்கு கூடியதும்  தஞ்சாவூர் கோவில் திரு விழா விபத்து சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.

அப்போது, “தஞ்சாவூர் மாவட்டம்  களிமேடு கிராமத்தில் புத னன்று(ஏப்.27) அதிகாலையில் நடை பெற்ற திருவிழாவின்போது எதிர் பாராதவிதமாக சப்பரம் உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதில்  11 பேர் உயிரிழந்தது அதிர்ச்சி யளிக்கிறது. இதில் காயம் அடைந்த வர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். அவர்களுக்கு தேவை யான சிகிச்சை அளிக்க வலியுறுத் தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளை சம்பவ  இடத்துக்கு அனுப்பி வைத்துள் ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயை  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தர விட்டுள்ளேன். நானும் அங்கு சென்று உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள் ளேன். இந்த விவாதத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனு தாபத்தை தெரிவிக்கும் தீர்மான த்தை முன்மொழிகிறேன்” என்றார். இதைத்தொடர்ந்து உறுப்பினர் கள் அனைவரும் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

ஒரு நபர் விசாரணை குழு அமைப்பு! தஞ்சை மாவட்டத்தில் நடந்த இந்த விபத்து தொடர்பாக சட்டப்பேர வையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு  இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மின்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் விளக்கம் அளித்துப் பேசினர்.  அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், “தஞ்சாவூர் களிமேடு அப்பர் கோயில் திருவிழாவில் களிமேடு பகுதியின் கடைசிப் பகுதிக்குச் சென்று திரும்புவது வழக்கமா னது. அது போலவே தேர் சென்றுள்ளது. அப்போது, சப்பரத்தின் பின்புறம் இணைக்  கப்பட்டிருந்த ஜெனரேட்டரின் அதிகப்படி யான எடையின் காரணமாக ஒருபக்கமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால்,  மேற்பகுதியானது சாலையின் ஓரத்தில் செல்லும் 33 கே.வி. உயர் மின்னழுத்தக் கம்பி யுடன் உரசியுள்ளது. இந்த சப்பரமானது  இரும்புச் சட்டங்கள் மற்றும் சீரியல் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததால் இரும்புக் கம்பி உரசியதுமே மேற்பகுதியில் தீ ஏற்பட்டது. சப்பரத்தின் மேல்பகுதி மடக்கும் விதத் தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த  மடக்கும் அமைப்பானது சப்பரம் திரும்பும்  இடத்தில் மடக்கப்படவில்லை. உச்சிப் பகுதி யை மடக்கியிருந்தால் இந்த மின்விபத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும், இதுபோன்ற துயர நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்கா மல் இருக்கவும், அதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க  வருவாய்த்துறை முதன்  மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமை யில் “ஒரு நபர் விசாரணைக் குழு” அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.

அமைச்சர் பி.கே.சேகர்,“இந்த கோவில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்த மானது அல்ல. இதனால், எந்த தகவலும் கொடுக்காமல் ஊர்மக்கள் திருவிழாவை நடத்தியுள்ளார்கள். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்” என்றார். இந்த விபத்தில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம்.மோகன் (22), கே.பிரபாத் (42), ஏ. அன்பழகன் (60), அவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர்.சந்தோஷ் (15). டி. செல்வம் (56), எம்.ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56),  ஏ.கோவிந்தராஜ் (50) ஆகி யோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஸ்.பரணி (13) மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். பலத்தக் காயமடைந்த  பி.கௌஷிக் (13), அருண்குமார் (24), கே.ஹரிஷ் ராம் (13), சுனிதா (33), ரவிச்சந்திரன் (48), எம்.நித்தீஷ் ராம் (13), ஆர்.கலியமூர்த்தி (40), ஏ.மாதவன் (16), டி.மோகன் (54), சிறு காயமடைந்த  என். விஜயகுமார் (23), கோ.விக்னேஷ் (21), க.திரு ஞானம்(36), ம.தினேஷ் (20),  வெ.ஹரிகரன் (14), கோவிந்தசாமி (48), அன்பரசு (32), செந்தில்குமார் (49), ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். 

ஆட்சியர் -அமைச்சர் ஆறுதல் 

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்கு மாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இதேபோல் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஏ.கயல்விழி, மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா கந்தபு னேனி ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தினர்.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவை யாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், தஞ்சை எம்எல்ஏ., டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும், சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.  

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறு கையில்,  “அதிகாலை 3 மணிக்கு நடை பெற்ற இச்சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதலமைச்சர், உடனடியாக 5 மணிக்கெல் லாம் எங்களையும் அதிகாரிகளையும் இங்கு அனுப்பி வைத்தார்.  இச்சம்பவத்தால் முதல்வர் மிகவும் மன வேதனை அடைந்துள்ளார். மனது கேட்கா மல் அவர் இங்கு வந்து கொண்டிருக்கிறார். நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டது. எங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம்.  அதிமுக கூறியுள்ள குற்றச் சாட்டுகளை, நாங்கள் குற்றச்சாட்டுகளாகப் பார்க்கவில்லை. இன்னும் அதிக கவனத்து டன் செயல்பட வேண்டும் என எடுத்துக் கொள்வோம். இதில் அரசியல் செய்ய கூடாது. இதை மிகப்பெரிய இழப்பாக நாங்கள் பார்க்கின்றோம். தமிழக முதல்வ ரும் மிகவும் மனவேதனையுடன் உள்ளார்.  இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப் படும்” என தெரிவித்தார். 

சிபிஎம் ஆறுதல் - அஞ்சலி 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீல மேகம்,  பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், கே.அருளரசன், மாவட்டக்குழு உறுப்பினர்  கள்  என்.குருசாமி, என்.சரவணன், மாநகரச்  செயலாளர் எம்.வடிவேலன், தஞ்சை ஒன்றி யச் செயலாளர் கே.அபிமன்னன்,  மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அருண்குமார் ஆகி யோர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மருத்துவர்களைச் சந்தித்து உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்ட னர். தொடர்ந்து, களிமேடு கிராமம் சென்று உயிரிழந்தவர்களின் உடலுக்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர்.