tamilnadu

ஏப்.26 முதல் சிபிஎஸ்இ 10 , 12 ஆம் வகுப்பு பருவத் தேர்வுகள்

சென்னை,மார்ச் 11- சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26 முதல் தொடங்கப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15வரை நடைபெறும். சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே24 ஆம் தேதி வரை நடைபெறும். சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் ஏற்க னவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.இரண்டாம் பருவத் தேர்வு கள் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டி ருக்கிறது. 26ம் தேதி தொடங்கும் 2ம் பருவத் தேர்வுக்கான பாட வாரியான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு கால அட்டவணை, தேர்வு நேரம், தேர்வு கள் உள்ளிட்ட விவரங்களுக்கு இணையதள முகவரி www.cbse.gov.in அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்க ளில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. அறிவுரை வழங்கியுள்ளது.  தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக வினாத் தாளை படிக்க 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்றும்  தெரி விக்கப்பட்டுள்ளது.