இன்று ‘நீட்’ நுழைவுத் தேர்வு
சென்னை, மே 3- 2025-26 ஆம் கல்வியாண் டில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மற்றும் சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர் வேதம் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவு, ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமா னோர் எழுதுகின்றனர். தமி ழகத்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின் றனர். இவர்களுக்காக சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 31 மாவட் டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதி தாக உருவாக்கப்பட்ட திருப் பத்தூர், தென்காசி, ராணிப் பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட 7 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை.
‘அக்னி நட்சத்திரம்’ இன்று தொடங்குகிறது
சென்னை, மே 3- தமிழ்நாட்டில் ஒவ் வொரு ஆண்டும் மே 4 முதல் 28 வரை ‘அக்னி நட் சத்திரம்’ என்று அழைக் கப்படும் ‘கோடை வெயில்’ காலம் கணக்கிடப்பட்டு வரு கிறது. அதன்படி இந்தாண் டுக்கான அக்னி நட்சத்திரம் எனப்படும் உச்ச வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்குகிறது. கடந்த ஆண்டு (2024) அக்னி நட்சத்திர காலத்தில், கரூ ரில் 111 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதுவே அந்த ஆண்டின் உச்சபட்ச மாக வெப்ப அளவாக இருந் தது குறிப்பிடத்தக்கது.
டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மே 5 அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மே 6 அன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறப்பட் டுள்ளது.