“அமைதியை அழிக்கும் புற்றுநோய் இஸ்ரேல்”
வடகொரிய அரசு கடும் கண்டனம்
பியாங்யாங், ஜூன் 20 - மத்திய கிழக்கில் அமைதியை அழி க்கும் புற்றுநோயாக இஸ்ரேல் உள்ளது என்றும், உலக பாதுகாப்பையும் அமை தியையும் அழிக்கும் முக்கியக் குற்ற வாளி இஸ்ரேல் தான் என்றும் வட கொரிய அரசு கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. புதிய போரை உருவாக்கிய ஆக்கிரமிப்பு சக்திகள் வடகொரிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய கிழக்கில் ஒரு புதிய போரை உருவாக்கி யுள்ள ஆக்கிரமிப்பு சக்திகள் உலக அமை தியை அழித்ததற்கான குற்றச்சாட்டில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது” என கண்டித்துள்ளது. ஜூன் 13 அன்று அதிகாலையில் ஈரான் குடியரசு மீது மிக மோசமான முறையில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோதமாகத் துவங்கிய இஸ்ரேல் அரசின் பயங்கரவாத தாக்குதல் சர்வதேச சமூகத்தின் கடுமை யான கண்டனத்தையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முழு அளவிலான போர் ஏற்படும் அபாயத்தையும் உருவாக்கி யுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்ட மீறல் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத் தின் அடிப்படைக் கொள்கைகளை வேண்டு மென்றே மீறி பொது மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் தினந்தோறும் அதி கரித்து வருவது ஒரு அரசின் இறை யாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப் பாட்டை வேண்டுமென்றே மீறுகின்ற கொடூரமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை யாகும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும் அது மனிதகுலத்திற்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றச்செயலாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது. வடகொரியாவின் நிலைப்பாடு இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து வடகொரிய குடியரசு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை உறுதியாகக் கண்டிக்கிறது என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடு களால் ஆதரிக்கப்படும் இஸ்ரேல் அர சானது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை அழிக்கும் புற்றுநோயாக உள்ளது என்றும், அது உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளியாகும் என்றும் கூறி யுள்ளது. இதனை உலகம் கண்ணால் பார்த்து வருகின்ற தற்போதைய மோச மான நிலைமை தெளிவாக நிரூபித்து க்காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளது. படிப்படியான எல்லை விரிவாக்கம் இதற்கு முன்பு மத்திய கிழக்கில் நடத்தப்பட்ட நான்கு போர்கள், அது மட்டுமின்றி பிற படையெடுப்புகள் மூலமாக இஸ்ரேல் தனது எல்லையை படிப்படியாக விரிவுபடுத்தியுள்ளது என்று அறிக்கை குறிப் பிட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் மட்டும், பாலஸ்தீனத்தின் காசா பகுதி, ஜோர்டான் நதியின் மேற்குக் கரை, லெபனான், சிரியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் மீது தனது தாக்குதல்களை படிப்படியாக அதி கரித்துள்ளது என்றும் கூறியுள்ளது. இத்தாக்குதல்கள் மூலம் லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து மிக மோசமான முறையில் மனிதாபிமான அழிவை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் பங்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடு களின் கூட்டணி, போர்ப் பதற்றத்தை அதி கரித்து வருவதை சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப் பட்ட ஈரான் தனது நியாயமான இறை யாண்மை உரிமை மற்றும் சுய பாதுகாப்பு உரிமையைப் பயன்படுத்துவதில் அவை பிரச்சனையை உருவாக்குகின்றன என்றும் கூறியுள்ளது. மேலும் இஸ்ரேல் தனது எல்லையை விரிவாக்குவதில் வெறிபிடித்து மத்திய கிழக்கில் நிலைமையை கட்டுப்படுத்த முடி யாத பேரழிவுக்குள் தள்ளுவதைக் கண்டிப்பதற்குப் பதிலாக மேற்குலக நாடு கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை கட்டுப் படுத்த முடியாத ஒரு பேரழிவு நிலைக்குள் தள்ளுகின்றன என்று விமர்சித்துள்ளது. யூத இன வெறியர்களின் பங்கு மத்திய கிழக்கில் ஒரு புதிய போரை கொண்டு வந்துள்ள சியோனிஸ்டுகளும் (யூத இனவெறியர்கள்), அவர்களை திரைக்குப் பின்னால் இருந்து ஆதரிக்கின்ற சக்திகளுமே சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதற்கு முழு காரண மானவர்கள் என்று வடகொரிய அரசு குற்றம்சாட்டியுள்ளது.