tamilnadu

img

அறுவை சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர் பலி

மும்பையை சேர்ந்த பிஎம்சி வங்கி வாடிக்கையாளர், வங்கியில் இருந்து தனது இதய அறுவை சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மும்பை புறநகரான முலுண்டைச் சேர்ந்த 83 வயதான முர்லிதர் தர்ரா, பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் 80 லட்சம் ரூபாய் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். 

இதற்கிடையே, ரூ. முறைகேட்டில் சிக்கியுள்ள பிஎம்சி வங்கியில் இருந்து வங்கி வாடிக்கையாளர்கள் 1 மாதத்துக்கு ரு.40 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்கலாம் போன்ற கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இந்நிலையில், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல், உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, முதியவரின் மகன் மற்றும் சில பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் பணத்தை திரும்ப தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.