நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
கடலூர், ஜூலை 17- வரதட்சணை கொடுமையால் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சாவிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம், விருத்தாச லம் அருகேயுள்ள எருமனூர் கிரா மத்தைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் கிரா மத்தைச் சேர்ந்த ஷோபனா (21) என்ப வருக்கும் இரண்டரை வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் வினோத் என்ற மகன் உள்ளான்.
திருமணத்தின்போது ஷோபனா வின் பெற்றோர் 50 சவரன் நகை, 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்க ளும் சீர் வரிசையாக வழங்கியுள்ள னர். பி.இ. படித்த விஜயகுமார் சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா பொதுமுடக்கம் காரண மாக வேலை இல்லாமல் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். அதனால் விஜயகுமார் மற்றும் அவரது தாயார் தொழில் தொடங்குவதற்கு ஷோபா னாவிடம் பணம், நகை கேட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும், விஜயகுமாருக்கு திரு மணத்திற்கு முன்பே வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக வும் கூறப்படுகிறது. இதனால் ஷோப னாவை அடித்து விரட்டுவதிலேயே விஜயகுமார் குறியாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷோபனா தனது சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதற்கிடையில், ஷோபனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சேலையைக் கழுத்தில் கட்டி தொங்கவிட்டபடியே வீடியோவில் பேசி அதை உறவினர்க ளுக்கு அனுப்பியுள்ளார். அதில், என் சாவுக்கு கணவர், மாமனார், மாமியாரே காரணம் எனவும், வரதட்ச ணைக் கேட்டு கொடுமைப் படுத்திய தாகவும் குறிப்பிட்டுள்ளார். ஷோபனாவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.