புதுக்கோட்டை, ஜூலை 10- அதிகரித்துவரும் பெண்கள் மீதான வன்முறை யைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூ ரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பலில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, நொடியூரில் பள்ளி மாண வியை நரபலி கொடுத்து படுகொலை செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதி ஆணவப் படு கொலை ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் ஒன்றி யப் பொருளாளர் ரஷியா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.சலோமி, தலைவர் பி.சுசீலா, ஒன்றியச் செயலாளர் எஸ்.பாண்டிச்செல்வி, துணைச் செயலா ளர் சரிதா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.