பெரம்பலூர், செப்.9- பெரம்பலூர் ஆட்சியர் அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் திங்களன்று நடைபெற்றது. அப்போது சிஐடியு ஆட்டோ தொழி லாளர்கள் சங்க கூட்டமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு கோரி க்கை மனு ஒன்றை அளித்தனர். அம் மனுவில், புதிய மோட்டார் வாகன சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து கடந்த 5.9.2019 அன்று ஆட்சி யர் வளாகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு கூட்டத்தில் இணைக் கட் டண விபரம், இருக்கைகள் அதிகமாக பொருத்துவது மற்றும் அதிகப்படி யான ஆட்களை ஏற்றும் ஆட்டோக் கள் அனுமதி சீட்டு ரத்து செய்யப் படும் என்ற முடிவை 6.9.2019 அனைத்து ஆட்டோ தொழிலாளர்களை அழைத்து வட்டார போக்குவரத்து அலுவலர் வழியாக தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு செய்தால் ஆட்டோ தொழிலாளர்கள் முழுவதும் பாதிப்புக் குள்ளாவார்கள் எனவும் தற்போ துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம், உதிரி பாகங்கள் விலை உயர்வு என்ற நிலையிலும் அரசு நிர்ணயித்த கட்ட ணத்தை விட குறைவான கட்டணத் தையே பொதுமக்களிடம் பெற்று ஆட்டோ தொழிலை சேவையாக செய்து வருகிறோம். எனவே பின் தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்களுக்கான புதிய விதிமுறைகளை தளர்த்தி ஏற்கெ னவே நடைமுறையில் உள்ளது போலவே பயணிகளை ஏற்ற அனு மதி வழங்கி ஆட்டோ தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாத்திட ஆட்சியர் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.