tamilnadu

img

பெரம்பலூர் ஆட்சியரை கண்டித்து போராட்டம் ... வி.தொ.ச. மாவட்டக் குழு சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி அளிப்பு

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாதிம்மூர் கிராமத்தில் 16.9.2020 அன்று தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிந்த ஜெயலட்சுமி, க.பெ சீனிவாசன் என்பவர் சட்ட விரோதஎந்திர பயன்பாட்டினால் டிராக்டர் மோதி பலியானார். இந்த சம்பவத்தை மறைக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர்.

இது குறித்து அக்கிராம மக்கள் 17.9.2020அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் உரியநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் விதொச சார்பில் 19.9.2020 அன்று திம்மூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 26.9.2020 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்த நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டி 2.10.2020 அன்று பெரம்பலூர் மாவட்டவருவாய் அலுவலர் ராஜேந்திரனிடம் மனு அளித்தனர். ஆனாலும் மாவட்ட நிர்வாகத்திடம் எந்தபதிலும் இல்லாததால் 15.10.2020 புதன்கிழமையன்று விதொச சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதிமறுக்கப்பட்டது. இதனால் தடையயை மீறி700க்கும் மேற்பட்ட விவசாயத் ழிலாளர்கள்விதொச மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எ.லாசர் தலைமையில் மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை, விதொச மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபடடனர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் வட்டாட்சியர் பாரதிவளவன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கைகளை விளக்கி மனு அளித்தனர். அம்மனுவில் 100 நாள்வேலை திட்டத்தில் எந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது என்பதையும் மீறி பயன்படுத்தியதால் தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. இதற்குகாரணமான ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிசெயலாளர் ஆகியோர் மீது குற்ற வழக்கு பதிவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூறு நாள் வேலையில் பயன்படுத்திய இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.உயிர் பலியான ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்,அவரது கணவருக்கு அரசு வேலை வழங்குவதோடு தாயை இழந்து வாடும் இரண்டு குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்கவேண்டும், திம்மூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று உள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிதலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசுஉத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விதொச மாவட்டக்குழு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.மணிவேல், விதொச மாவட்டச்செயலாளர் பி.ரமேஷ் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை, திமுகநிர்வாகிகள் ரவிச்சந்திரன், பிரபாகரன், விசிகவீரசெங்கோலன், இரா.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தமிழ்செல்வன், வழக்கறிஞர் ப.காமராசு, மனிதநேய மக்கள் கட்சி சுல்தான் மொய்தீன், எஸ்டிபிஐ ஷாஜகான், திராவிடர் கழகம் தங்கராசு, அக்ரிஆறுமுகம், கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், சக்திவேல் யூனியன் முஸ்லீம்லீக் சர்புதீன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு பி.துரைசாமி, எ.கலையரசி, எஸ்.அகஸ்டின், இளங்கோவன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்பிடி.ராஜாங்கம், மாதர் சங்கம் பத்மா உள்பட பலர்கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் நடத்த விடாமல் செய்வதற்காக வருவாய்த்துறை ஊழியர்களும், உள்ளாட்சித்துறை ஊழியர்களும் காவல்துறையினருடன் சேர்ந்து கிராமங்களில் பெண் களை வரவிடாமல் தடுக்கும் நோக்கில் 15.10.2020போராட்ட தினத்தன்று காவிரி குடிநீர் சப்ளை செய்தும், 100 நாள் வேலைக்கு கட்டாயம் வரவேண்டும் என்றும் வாகனத்தில் செல்ல விடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.                    (ந.நி)