tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழா அன்றும், அதற்கு முந்தைய நாளிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

                                ********************

உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வனப்பகுதியில் 1,838 மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

                                ********************

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருவதை தடுக்க, அச்சந்தையின் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்குமாற்றப்பட்டுள்ளது.

                                ********************
மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறப்பது குறித்து  டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

                                ********************

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 84.14 -க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 75.95 - க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

                                ********************

சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 40 மின்சார ரயில் சேவை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்தெரிவித்துள்ளார்.

                                ********************

நாட்டில் விரைவில் தரவுப் பாதுகாப்பிற்கு சட்டம் இயற்றப்படும் என்று மத்தியசட்டம்- தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வியாழக்கிழமை தெரிவித்தார்.

                                ********************

பாஜக அரசிற்கு எதிரான கட்சிகளை அணி திரட்டுவேன் என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

                                ********************

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், மருத்துவ ஊழியர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

                                ********************

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. 

                                ********************

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.

                                ********************

கிழக்கு லடாக்கில் கடும் குளிரை சமாளிக்க படை வீரர்களுக்கு நவீன குடியிருப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

                                ********************

லண்டனில் இருந்து மீட்கப்பட்டு, தில்லி கொண்டு வரப்பட்ட சிலைகள் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

;