சென்னை,ஏப்.20- கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா ஒற்றுமையாக இருக்குமாறு அறைக்கூவல் விடுக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான கீதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற தொலைக்காட்சி பிரபலங்கள் கார்த்திக் வாசு, ஆயிஷா ரோஹிணி, மற்றும் ரேஷ்மா ரேயா ஆகி யோர் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உடன் இணைந்து, ‘நம்மால் முடியும், நாம் செய்து காட்டுவோம்’ என்று பொருள்படும் ‘வீ வில், வீ கேன்’ என்ற பாடலை அறிமுகப்படுத்தி யுள்ளனர்.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 27 சாதனை நாயகர்கள், 9 வெவ்வேறு மொழிகளில் பாடலைப் பாடு கிறார்கள். நாம் சமூக விலகலைக் கடைப்பி டித்துவரும் இத்தருணத்தில், நம் அனை வரின் ஒன்றுப்பட்ட மன உறுதியானது, தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நி லையை வெற்றிகரமாக கடந்து வருவதில் உண்டாக்கும் தாக்கத்தை எடுத்துக்காட்டு வதை இக்கீதம் நோக்கமாக கொண்டுள்ளது.