பதில் மனு தாக்கல் செய்யாத மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி,ஆக.26- வங்கிக்கடனில் வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் ,மக்கள் படும் துன்பங்கள் மீதும் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.வங்கிக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி மீது பழியை போட்டுவிட்டு மத்திய அரசு தப்பித்துக் கொள்ளக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்த ரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழி லாளர்கள், மக்கள் வேலையின்றி, வரு மானமின்றி பெரிதும் அவதிப்பட்டனர். எனவே வங்கியில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கடன் தவணை களை தாமதமாக கட்டலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நட வடிக்கைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை புதனன்று நடைபெற்றது. அப்போது கடன் இ.எம்.ஐ செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தர வில், ‘வங்கிக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள் வதையே மத்திய அரசு வழக்கமாக கொண்டுள்ளது. வட்டிக்கு வட்டி வசூல் ரிசர்வ் வங்கியின் முடிவு எனக்கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்கிறது. இத்தகைய விவகாரங்களில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். நீங்கள் அறிவித்த பொது முடக்க உத்தரவால் தான் இந்த பிரச்சனை ஏற் பட்டது. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவ காரத்தில் மத்திய அரசு சுயமாக முடி வெடுக்க வேண்டும். வணிக நலனில் மட்டும் அக்கறை செலுத்தக்கூடாது. மக்கள் படும் துன்பங்கள் மீதும் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும். உங்களது பணியை செய்யும் நேரம் இதுவல்ல; தேவையான நிவார ணத்தை வழங்குவதும் அவசியம். வங்கிக்கடன் வழக்கில் ஒரு வாரத்தில் தெளிவான விளக்கத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர் பான வழக்கு மீதான விசாரணை செப்ட ம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் படுகிறது என்று நீதிபதிகள் தெரி வித்துள்ளனர்.