tamilnadu

img

நீட் அச்சத்தால் மாணவி தற்கொலை: அம்மா நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன் - ஜோதி துர்கா உருக்கம்

மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதி துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இவர்களது குடும்பம் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
ஜோதி துர்கா கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் இந்த ஆண்டு அதிக முயற்சியுடன் படித்து வந்தார்
இந்நிலையில் நாளை(செப்.13) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா அச்சத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதற்கிடையில் மாணவி கடைசியாக உருக்கமான ஆடியோவைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், 'எல்லோருமே என்னிடம் ரொம்ப அதிகமாக எதிர்பாத்தனர். இது என்னுடைய முடிவுதான். நான் தான் எனது தவறுக்கு காரணம். சாரி. எனக்கு ரொம்ப ஹேப்பியான குடும்பம் கிடைச்சிருக்கு. எனக்கு தான் அத பாதுகாக்க தெரியல. நான் போறேன். அம்மா நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன். என்ன மன்னிச்சிருங்க' இவ்வாறு மாணவி உருக்கமாக அழுதுகொண்டே பேசியுள்ளார்.
மாணவி ஜோதி துர்காவின் இந்த ஆடியோ  தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது

இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
நீட் தேர்வு அச்சத்தால் அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை கொண்ட ஒரு வாரத்திற்குள் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.