tamilnadu

img

சாத்தான்குளம் கொலை வழக்கு... மூன்றாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல்...

மதுரை:
சாத்தான்குளத்தில் வணிகர்களான  ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கிக் கொல்லப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி மூன்றாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் காவலர் முருகன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “ சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங் களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டேன். நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்று உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிஇளந்திரையன் முன்பு புதனன்று நடைபெற்றது. அப்போது சிபிஜ பதில் அளிக்கக் கோரி வழக்கு விசாரணையை அக்டோபர் 16-ஆம் தேதிக்கு  நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.