tamilnadu

img

பஸ்வான் கட்சி சார்பில் போட்டியிடும் பாஜகவினர்... நிதிஷ்குமாரை ஓரங்கட்ட அடுத்த திட்டம்

பாட்னா:
ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.தற்போதைய முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன்தான் தங்களுக்குப் போட்டி; மற்றபடி பாஜகவை எதிர்த்து, தாங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.

லோக் ஜனசக்தி கட்சியின் இந்த முடிவுக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும், முதல் வர் பதவி கேட்கும் நிதிஷ் குமாரை,ஓரங்கட்டுவதற்கே இந்த ஏற்பாடு என்றும் ஆரம்பம் முதலேபலமான பேச்சு அடிபட்டு வருகிறது.இந்நிலையில், பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து லோக் ஜனசக்தி கட்சியில் இணைவது அந்தசந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.பீகாரின் தினாரா தொகுதி,பாஜக கூட்டணியில் ஐக்கியஜனதாதளத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில்,அந்த தொகுதியைச் சேர்ந்தவரும், பாஜக முன்னாள் மாநில துணைத்தலைவருமான ராஜேந்திரா சிங், திடீரென லோக் ஜனசக்தி கட்சியில் இணைந்துள் ளார். இவர் தற்போது தினாராதொகுதியில் ஐக்கிய ஜனதாதளத்தை எதிர்த்துப் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல பாஜக முன்னாள்பெண் எம்எல்ஏ உஷா வித்யார்த்தி (பலிகஞ்ச்), ராமேஸ் வர் சௌரிசா (நோகா) ஆகியோர் லோக் ஜனசக்தி கட்சியில் இணைந்துள்ளனர். இவருக்கும் ஐக்கிய ஜனதாதளத்திற்கு எதிராகப்போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்என்று கூறப்படுகிறது.அதிருப்தி தலைவர்கள் என்ற பெயரில் இவர்களை பாஜகவே தங்களுக்கு நெருக்கமான லோக் ஜனசக்தி கட்சிக்குஅனுப்பி, ஐக்கிய ஜனதாதளத் திற்கு எதிராக களத்தில் இறக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.