புதுதில்லி,ஜூன் 30- கீழமை நீதிமன்றங் களுக்கான நீதிபதிகளை நியமிப்பதற்கு அகில இந்திய நீதித்துறை தேர்வா ணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டுகளை தேர்வு செய்ய, ஐ.ஜே.எஸ் எனப் படும் இந்தியன் ஜுடீசியல் சர்வீசஸ் என்ற தேர்வு முறையைக் கொண்டு வர முந்தைய காங்கிரஸ் ஆட்சி யில் திட்டமிடப்பட்டது. இதற்காக தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மசோதா, அரசியல் சட்டத்துக்கு எதி ரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த திட்டத்தை தற் போது கையில் எடுத்துள்ள பாஜக, அகில இந்திய நீதித்துறை தேர்வாணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம், போட்டித் தேர்வு நடத்தி நீதிபதிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளது.