புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண்ணை ஒரு கும்பல் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்துள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஹத்ராசுக்கு செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பாஜக யோகி அரசின் இந்தஅராஜகத்தை பத்திரிகையாளர்கள் மற்றும்பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டித்துள் ளன.
ஹத்ராஸ் நோக்கிச் செய்தி சேகரிக்கச் சென்ற கேரள இதழாளர் சித்திக் கப்பன் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு, தில்லி பத்திரிகையாளர் சங்கம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக தில்லி பத்திரிகையாளர்சங்கம் (DUJ-Delhi Union of Journalists) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
கேரள உழைக்கும் இதழாளர்கள் சங்கத்தின் தில்லிப் பிரிவின் செயலாளரான சித்திக் கப்பான், மதுராவிலிருந்து ஹத்ராஸ்சென்றிருக்கிறார். ஒரு கும்பலால் பெண்வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்குறித்து செய்தி சேகரிக்கவே அவர்சென்றுள்ளார். அவர் ஒரு தொழில்முறைரீதியான இதழாளர். அவர் அழிமுகம் இணையஇதழ் உட்பட பல மலையாள ஊடகங்களுக்குப் பணிசெய்து வருகிறார். அவர்கைது செய்யப்பட்டபோது ஒரு நிறுவனத்திற்காக அதிகாரப்பூர்வமாகச் சென்றிருந்தார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். அதேபோன்று, பிரசாந்த் கனோஜியா என்பவர், உத்தரப் பிரதேச காவல்துறையினரால் 2020 ஆகஸ்ட் 18 அன்று அவர் பதிவேற்றம் செய்திட்ட டிவிட்டர் பதிவு ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு இன்றுவரையிலும் சிறையில் இருந்துவருகிறார். இரண்டகமான காரணங்கள் மீது இதழாளர்களைக் கைதுசெய்திடும் போக்கு வருந்தத்தக்கது.
இதழாளர்களை அவர்கள் கூறும்கருத்துக்களுக்காகவும், செய்திகளுக்காக வும் கைதுசெய்வது, பத்திரிகை சுதந்திரத்தை மீறும் செயல். சமூக முடக்கக் காலத்தில் டிவிட்டர் பதிவிலிருந்து வீடியோ செய்திகள் வரை பல்வேறு காரணங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து இதழாளர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (ந.நி.)