tamilnadu

img

உத்தரபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்....  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு... 

தில்லி 
உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதுமிக்க தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க அந்த இளம்பெண்ணின் நாக்கு அறுக்கப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலை பெற்றோர்களுக்கு கொடுக்காமல் உத்தரபிரதேச அரசு போலீசார் உதவியுடன் காட்டு பகுதியில் எரித்தது.  

இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்கா பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற ஹத்ராஸ் மாவட்டம் செல்ல (அக்., 1-ஆம் தேதி)  முயன்றனர். அவர்களை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். குறிப்பாக ராகுல் மீது தாக்குதல் நடத்தும் விதத்தில்  நடந்து கொண்ட போலீசார் அவரை கீழே தள்ளிவிட்டனர். ராகுல்காந்தி  சாலையில் விழுந்தார். ராகுல் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். குறிப்பாக பாஜக கட்சியில் சில எம்பி-க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். 

இந்நிலையில் சாமியார் கையில் சிக்கி தவிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் வழக்கறிஞர் சி.எல். ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.