புதுதில்லி:
கொரோனா 2-ஆவது அலை ஏற்பட்டால், பொருளாதாரம் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம், ஆளுநர் சக்திகாந்த தாஸ்தலைமையில் வெள்ளிக்கிழமையன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் ரிசர்வ்வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. எனினும், இரண்டாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெற்றன. அதன் மூலமாக பொருளாதாரம் மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப் பட்டன.எனினும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையில் சில தடைகள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வீசக்கூடும் என்பது. அவ்வாறு நிகழ்ந்தால்பொருளாதார வளர்ச்சிமீண்டும் பாதிக்கப்படுவதற் கான வாய்ப்புகள் உள்ளன.வேளாண் விளைபொருள் களின் உற்பத்தி மற்றும் விநியோகம் அதிகரித்துள்ளதன் காரணமாக அவற்றின் விலைகுறைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, பணவீக்கமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம்(ரெப்போ ரேட்) குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள் ளன. எனினும், ரிசா்வ் வங்கி நிர்ணயித்துள்ள 2 முதல் 6 சதவிகித இலக்குக்குள் பணவீக்கம் குறைந்தால் மட்டுமே, வட்டி விகிதம் குறைக்கப்படும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கிஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் 2-ஆவது அரையாண்டில் பணவீக்கம் 4.5 முதல் 5.4சதவிகிதத்திற்குள் இருக்கும்என்று ரிசர்வ் வங்கி கணித் துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும் என்றும் அது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.