tamilnadu

ஹத்ராஸ் சம்பவம் எதிரொலி : பெண்கள் பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சகம் புதிய ஆலோசனை...

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தின் எதிரொலியாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள  ஆலோசனையில்,  “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 154 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் அறியக்கூடிய குற்றம்” போன்ற ஒரு வழக்கில் காவல்துறையினர்  முதல்தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட குற்றங்களுக்கு,  ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். அறியக்கூடிய குற்றங்கள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யத் தவறும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கைஎடுக்க மாநில அரசுகளுக்குமத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்து தடயங்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.