புதுதில்லி:
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஹர்ஷவர்தன் தனது டிவிட்டர் பதிவில், ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசியைபயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் தயாரானவுடன் நியாயமாகவும், சமமான அளவிலும் விநியோகம் செய்யப்படும்.தடுப்பூசியின் அனைத்து அம்சங்களையும் ஆராய உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசியை எவ்வாறு உறுதி செய்வது என்பது தான் எங்களின் முன்னுரிமை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.