இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 34 ஆயிரத்து 956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழலில் நாடு முழுவதும் 3 லட்சத்து 42 ஆயிரத்து 473 பேர் சிகிச்சை பெறும் நிலையில் 6 லட்சத்து 35 ஆயிரத்து 757 பேர் குணமாகியுள்ளனர்.