tamilnadu

காங். தற்காலிக தலைவர் சோனியா காந்தி விலகல்

தில்லி, ஆக.23- காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகினார். காங்கிரஸ் கட்சி யின் காரியக் கமிட்டிக் கூட்டம் தில்லியில் திங்களன்று நடை பெறும் நிலையில் சோனியாகாந்தி பதவி விலகியதாக தக வல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, தலை வர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதைத் தொடர்ந்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா உள்ளார். அவர் பொறுப்பேற்று ஒரு வருடத்தை கடந்துள் ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் திங்களன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் அல்லது ஏ.கே.அந்தோணி யை கட்சி தலைவராக்க வேண்டும் என சில மூத்த தலை வர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தற்கா லிக தலைவர் பதவியில் இருந்து ஞாயிறன்று மாலை சோனியா காந்தி விலகிக்கொண்டார்.