tamilnadu

img

உத்தரபிரதேசத்தில் 3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு

உத்தரபிரதேசத்தில் 3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் பாஸ்கா கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 சகோதரிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதில் 8,12,17 வயதுடைய சகோதரிகள் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூத்த சகோதரியின் முகம் மற்றும் முன் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.மற்ற 2 சிறுமிகளுக்கு சிறு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் கோண்டா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாக்குதலுக்குள்ளானவர்கள் தலித் சிறுமிகள் என காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.