tamilnadu

img

வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறுக!

குடியரசுத் தலைவரிடம் புதுச்சேரி முதல்வர் கோரிக்கை

புதுச்சேரி,டிச.25-  புதுச்சேரி பிரதேசத்திற்கான மக்கள் நலத்திட்டங்களை ஆளுநர் கிரண்பேடி தடுத்து வருகிறார் என்று முதல்வர் நாராய ணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.  இந்நிலையில் புதுச்சேரி வளர்ச்சிக்கு கிரண்பேடி முட்டுக்கட்டையாக உள்ளார்.எனவே அவரை திரும்பப்பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு அளித் துள்ளார்.  திருநள்ளாறு கோவிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவி யுடன் வருகை தந்துள்ளார். புதுச்சேரி முத லமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோரும் உடன் சென்றனர். இந்நிலையில் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த்தை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புதனன்று சந்தித்து பேசி னார்.  இந்த சந்திப்பில், அவரிடம் மனு ஒன்றை நாராயணசாமி அளித்தார். இதன்பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச் சேரிக்கு மாநில அந்துஸ்து வழங்க வேண் டும். மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்க்க வேண்டும். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். அவரை திரும்பப்பெற வேண்டும் என குடியரசுத்தலைவரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
 

;