tamilnadu

img

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனைகள் வயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது 

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சோதனைகள் வயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியையும், டி செல்களையும் தூண்டுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி உடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோதனைகளின் ஆரம்ப முடிவுகளில், வயதானவர்களிடையே வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது. இந்த தடுப்பூசி வயதானவர்களில் பாதுகாப்பு ஆன்டிபாடிகள் மற்றும் டி-செல்களைத் தூண்டுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், இது 18 முதல் 55 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான பெரியவர்களிடம் தடுப்பூசி "வலுவான நோயெதிர்ப்பு சக்தியை" உருவாகியுள்ளதை காட்டியுள்ளது. ஆனால் தடுப்பூசி இறுதியில் வயதானவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இருப்பினும், நோயெதிர்ப்புத் திறன் சோதனைகள் தொற்று இருக்கும் போது, உத்தரவாதம் அளிக்காது என எப்டி எச்சரித்துள்ளது.

கண்டுபிடிப்பின் விவரங்கள் விரைவில் ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.