தில்லி,
தில்லி மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை மையத்தில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிபத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.