புதுதில்லி, ஜூன் 14- கொரோனாவுக்கு எதிரான போராட் டத்தை சவாலாகவே சந்தித்து வரு கிறார் தில்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தில்லியில் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தொற்று நோய்க்கு எதிராக போராடிவரும் தில்லி அரசிற்கு உதவுவதற்காக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து அவ னிஷ் குமார், மோனிகா பிரியதர்ஷினி, அருணாச்சல பிரதேசத்திலிருந்து கவுரவ் சிங் ராஜாவத், விக்ரம் சிங் மல்லிக் என மொத்தம் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி களை தில்லிக்கு மாற்றியுள்ளார் அமித்ஷா. இதற்கான உத்தரவை ஞாயி றன்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கொரோனா பரவில் மிகமோசமான மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமித்ஷா மூன்றாவது இடத்திலுள்ள தில்லியை மோசமான நிலையிலிருந்து விரைவில் மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தில்லியில் ஞாயிறு நிலவரப்படி 38,988 பேர் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். 1,271 பேர் உயிரிழந்துள்ளனர். 14,945 பேர் குணமடைந்துள்ளனர்.