விமான டிக்கெட்டுகளை திரும்பிச் செலுத்தும் வழக்கில், பயணிகளுக்கு தாமதத்திற்கு 0.5 சதவிகிதம் வட்டி அளிக்க வேண்டும் என அரசு பரிந்துரைத்துள்ளது. இதனை விமான நிறுவனங்களான விஸ்டாரா மற்றும் ஏர் ஏசியா எதிர்த்துள்ளது.
கொரோனா காலத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால், முன்பதிவு செய்தவர்களுக்கு விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்புச் செலுத்துமாறு கூறினார்கள். இந்த நிலையில், அவ்வாறு திருப்புச் செலுத்த முடியாதா நிலையில் காலதாமதம் செய்தால் 0.5 சதவிகிதம் வட்டியாக வழங்க வேண்டும் என அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும் விஸ்டாரா, ஏர் ஏசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இதனை எதிர்த்துள்ளனர்.
இதனிடையே, கேரியர் இண்டிகோ நிறுவனமானது ஊரடங்கு காலத்திற்கான டிக்கெட்டுகளை முழுமையாக திருப்பி செலுத்தியுள்ளது. டிக்கெட் ரத்து காரணமாக ஒசாமா பாதிக்கப்பட்டுள்ள, எந்த ஒரு குறிப்பிட்ட பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு இதனை கூறியுள்ளதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.