tamilnadu

புதுக்கோட்டை, தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்க! மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை  

தஞ்சாவூர், ஆக.8- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தஞ்சை வட்டக் கிளை 5ம் திட்டப் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் சிஐ டியு அலுவலகத்தில் நடைபெற்றது.  பேரவைக் கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ தலைமை வகித்தார். கோட்டச் செய லாளர் ஜி.உத்திராஜ் வரவேற்றார். எம்.முத்தண்ணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மண்டலச் செயலாளர் ஜி. பஷீர் துவக்கவுரையாற்றினார். திட்டச் செயலாளர் எம்.முனியாண்டி வேலை அறிக்கை வாசித்தார். திட்டப் பொரு ளாளர் சி.கணேசன் வரவு-செலவு அறிக்கையினை தாக்கல் செய்தார்.  விவாதம் மற்றும் தொகுப்புரைக்கு பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். இதில் கவுரவத் தலைவ ராக கே.ஆர்.ஜோதிராமன்,  தலைவ ராக எம்.முனியாண்டி, செயலாளராக டி.கோவிந்தராஜூ, பொருளாளராக ஜி. உத்திராஜ், துணைத் தலைவர்களாக ஒய்.இராஜேந்திரன், எஸ்.முருகேசன், ஆர்.மேகநாதன், என்.வீரையன், இணைச் செயலாளர்களாக டி.நமச்சி வாயம், சி.கணேசன், ஆர்.இராஜ மாணிக்கம், செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநில துணைத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம், அரசு ஓய்வு பெற் றோர் சங்க கூட்டமைப்பு மாவட்டச் செய லாளர் வழக்கறிஞர் ஆர்.தமிழ்மணி, சிஓடிஇஇ துணைத்தலைவர் எஸ். ராஜாராமன் ஆகியோர் புதிய நிர்வாகி களை வாழ்த்திப் பேசினர். துணைப் பொதுச் செயலாளர் எம்.பாலசுப்ர மணியன் நிறைவுரையாற்றினார். எஸ். முருகேசன் நன்றி கூறினார்.  கூட்டத்தில், “புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வரவேண்டும். ஓய்வு பெற்ற சிபிஎஸ் சந்தாதாரர்களுக்கு பணப்பயனை தாமதமின்றி வழங்க வேண்டும். கம்யூட்டேசனுக்கு பிடித்தம் செய்யும் கால அளவை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குடிநீர்த் திட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரிக்கை

புதுக்கோட்டை, ஆக.8-  குடிநீர்த் திட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வாரியம் வெளியிட்டுள்ள ஷெட்டியூல் ஆப் ரேட் படி ஊதியம் வழங்க வேண்டு மென இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத் துள்ளது. சிஐடியு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொரு ளாளர் எஸ்.பாலசுப்ரமணியன் உள் ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற னர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யத்தின் சார்பில் குடிநீர்த் திட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வாரியம் வெளியிட்டுள்ள ஷெட்டியூல் ஆப் ரேடி படி ஊதியம் வழங்க வேண்டும். 706 கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இயங்கும் வெள்ளாலவயல், ஏம்பல் நீரேற்று நிலைய இயக்குநர்களுக்கு வழங்க வேண்டிய 18 மாத சம்பளப் பாக்கியையும், கட்டுமாவடி, அத்தாணி யில் உள்ள நீரேற்று நிலைய இயக்கு நர்களுக்கு வழங்க வேண்டிய 2 மாத சம்பளப் பாக்கியையும் உடனடியாக வழங்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.