tamilnadu

img

‘மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ புதுகை ஆட்சியர் பேச்சு

புதுக்கோட்டை, ஜூன் 5-புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தினவிழாவில் அவர் மேலும் பேசுகையில், புவியின் வெப்ப நிலையை பாதுகாக்க மரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக அளவு மரங்கள் வளர்க்கப்படுவதால் புவியின் வெப்பநிலை குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. மேலும், நிலத்தை மாசுபடு த்தக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக பொது மக்கள் தவிர்க்க வேண்டும். தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுதல் போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைகிறது. நாம் வாழும் பூமியை எவ்வித மாசுபாடின்றி பாதுகாப்பது அனைவரின் கடமை. எனவே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்து செயல்களையும் பொது மக்கள் தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வீடுகள்தோறும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பராமரிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ஆனந்த்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, வனச்சரக அலுவலர் சதாசிவம் கலந்து கொண்டனர்.