tamilnadu

img

போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை,  மார்ச் 17- போர்க்கால அடிப்படை யில் மாவட்டத்தில் கொரோ னா வைரஸ் தடுப்பு நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருவதாக புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது: மாவட்டத்தில் கொரோ னா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மாவட்டத்தில் எவ ருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திரு மணமண்டபங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களுக்கு வரும்பொழு தும், திரும்பி செல்லும்பொ ழுதும் தவறாமல் கை கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு 04322- 221733 என்ற எண்ணில் புதுக்கோட்டை துணை இயக்குநர் சுகாதார அலுவ லகம் மற்றும் 04371-220501 என்ற எண்ணில் அறந்தாங்கி துணை இயக்குநர் சுகாதார அலுவலகத்தில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை யினை தொடர்பு கொள்ள லாம் எனத் தெரிவித்துள்ளார்.