புதுக்கோட்டை, நவ.27- புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப் பள்ளியில் பெற்றோர்களு க்கு பாராட்டு விழா, சிறந்த மாணவர்க ளுக்கான விருது வழங்கும் விழா, நிலவேம்பு குடிநீர் மற்றும் நண்டு சூப் வழங்கும் விழா மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையா சிரியர் சிவ.சக்திவேல் தலைமை வகித் தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரெத்தினம் கைவினைப் பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதிக மாணவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர்களைப் பாராட்டி கல்விக்குழு தலைவர் எஸ்.சேட் என்ற அப்துல் ரகுமான் பரிசு வழங்கினார். எல்ஐசி முதுநிலை மேலாளர் அருள் ஆர்.கணேசன் சிறந்த மாணவர்களுக்கான விருதினை வழங்கி சிறப்பித்தார். சிவகாமியம் மாள் ரத்ததானக் கழகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் டெங்கு காய்ச்சல் தடுக்கும் நிலவேம்பு குடிநீர் மற்றும் சூப் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் வீ.ரங்கரா ஜன் பள்ளி மேலாண்மைக் குழுத் தலை வர் எஸ்.சாமுண்டீஸ்வரி, நாணயவி யல் கழகத் தலைவர் பஷீர் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் வரவேற்க, ஆசிரியை நிர்மலா நன்றி கூறினார்.