புதுக்கோட்டை, நவ.19- மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. தொழிற்சங்க உரிமை, கூட்டுப் பேர உரிமையை நிலைநாட்ட வேண்டும். தொழில் நெருக்கடியால் வேலையிலிருந்து வெளியேற்றப் படும் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளையும், விவசாயத்தை யும் பாதுகாக்க வேண்டும். கிரா மப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பிரச்சார இயக்கம் நவ.17 முதல் 19 தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கறம்பக்குடி ஒன்றியத்தில் நடை பெற்ற பிரச்சாரத்திற்கு கட்டுமானத் தொழிலாளர் சங்க நிர்வாகி ராஜேந்தி ரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகி சாமி அய்யா, மின் ஊழியர் சங்க நிர்வாகி காளிமுத்து, அனைத்துப் போக்குவரத்து சங்க நிர்வாகி பாலையா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். திருவரங்குளம் ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலை வர் கே.முகமதலிஜின்னா, துணைத் தலைவர்கள் கு.செல்வராஜ், ஆறு முகம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் மற்றும் நிர்வாகிகள் தரணி முத்துக்குமார், தர்மராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விராலிமலை ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ப.சண் முகம் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சா.தோ.அரு ணோதயன் மற்றும் திரவியராஜ், இன்னாசி முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை பொன்னமரா வதியில் சிஐடியு சார்பில் மோட்டார் பைக் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ஏ.தீன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.முக மதலி ஜின்னா சிறப்புரையாற்றினார். அனைத்து போக்குவரத்து, சாலையோர வியாபாரிகள் சங்க மினிடோர் ஓட்டுனர் சங்க, மின் ஊழியர் மத்திய சங்க, ஆட்டோ தொழிலாளர் சங்க, சுமைப்பணி தொழிலாளர் சங்க, உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மோட்டார் பைக் பேரணி காந்தி சிலையில் ஆரம்பித்து அண்ணா சாலை வழியாக பேருந்து நிலை யத்தில் முடிவடைந்தது.