புதுக்கோட்டை, மே 10- புதுக்கோட்டை மாவட் டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிக் ்கப்பட்டிருந்த நிலையில் சென்னை மற்றும் கோயம் பேட்டில் இருந்து புதுக் கோட்டைக்கு வந்திருந்த மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5 பேரில் ஒருவர் குணமடை ந்து வீடு திரும்பியுள்ளார், இந்நிலையில், கன்னி யாகுமரி மாவட்டத்திலுள்ள ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 235 பேர் கன்னி யாகுமரியிலிருந்து பேருந்து மூலம் சனிக்கிழமை புதுக்கோட்டைக்கு அழை த்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும், திருமயத்தில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மேலும், அவர்கள் தனி மைப்படுத்தப்பட்டு கொரோ னா பரிசோதனை செய்யப் பட்டு முடிவுகள் தெரிந்த பின்னரே அவரவர் சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.