பீகார் மாநிலத்தில் திருமண பந்தலில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் லாக்கிசராய் பகுதியில் சாலையின் ஓரமாக திருமண நிகழ்ச்சிக்கா பந்தல் வேயப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவில் அந்த வழியாக வந்த லாரி திருமண பந்தல் மீது வேகமாக மோதியது. எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் விபத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநர் தப்பியோடி தலைமறைவாக உள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமையாக உள்ள ஓட்டுநரை தேடி வருகின்றனர்.